கேள்வி பதில்

#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்மதுல்லாஹி_வபரகாத்துஹு.

#கேள்வி 1

________ ஆசை உங்களை அல்லாஹ்வை விட்டும் பராக்காக்கி விட்டது.

#பதில் 1

اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ‏
செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
(அல்குர்ஆன் : 102:1)

#கேள்வி 2

அந்நாளில் சிதறடிக்கப்படட _____ போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்

அ. ஈசல்

ஆ. கொசு

இ. துகள்

#பதில் 2

يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ‏
அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : 101:4)

#கேள்வி 3

மலைகள் கொட்டப்பட்ட _____ போன்று ஆகிவிடும்.

#rpt

#பதில் 3

وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِ‏
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
(அல்குர்ஆன் : 101:5)

#கேள்வி 4

ஹாவியா என்பது என்ன ?

#பதில் 4

وَمَاۤ اَدْرٰٮكَ مَا هِيَهْ ‏
இன்னும் (“ஹாவியா”) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
(அல்குர்ஆன் : 101:10)

نَارٌ حَامِيَةٌ‏
அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
(அல்குர்ஆன் : 101:11)

#கேள்வி 5

கண்ணியமிக்க இரவு ____ மாதங்களை விட மிக்க மேலானதாகும்

அ. 100

ஆ. 1000

இ. 10000

#rpt

#பதில் 5

لَيْلَةُ الْقَدْرِ  ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ‏
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
(அல்குர்ஆன் : 97:3)

#கேள்வி 6

_____என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

#பதில் 6

خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌‏
“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
(அல்குர்ஆன் : 96:2)

#கேள்வி 7

அவனே(அல்லாஹ்)  ______ கொண்டு கற்றுக் கொடுத்தான்.

#பதில் 7

الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِۙ‏
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 96:4)

#கேள்வி 8

நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்  செல்வத்தால் தேவையற்றவராக ஆக்கினான்.

அ. சரி

ஆ. தவறு

#பதில் 8

وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰى‏
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
(அல்குர்ஆன் : 93:8)

#கேள்வி 9

_______ உதிர்ந்து விழும்போது

அ. இலைகள்

ஆ. நிலவு

இ. நட்சத்திரங்கள்

#பதில் 9

وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْۙ‏
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
(அல்குர்ஆன் : 82:2)

#கேள்வி 10

நாம் ______ சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்; என அல்லாஹ் கூறுகிறான்?

#பதில் 10

وَلَقَدْ نَجَّيْنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ مِنَ الْعَذَابِ الْمُهِيْنِۙ‏
நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;
(அல்குர்ஆன் : 44:30)

Comments

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்