கேள்வி பதில்
கேள்வி - 1 மறுமைநாளில் மக்கள் அல்லாஹ்வின் முன்னால் எவ்வாறு இருப்பார்கள்?
A - அச்சநிலையில்
B - போதையுற்ற நிலையில்
C - பீதியடைந்த நிலையில்
விடை: 2 போதையுற்ற நிலையில்
திருக்குர்ஆன்-22:2
கேள்வி - 2 உண்மையான இறைநம்பிக்கையாளர் இனி ஒரு போதும்___________கூறுவது கூடாது என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்..
A - பொய் கூறுவது..
B - பொய் சாட்சியம் கூறுவது..
C - அவதூறு கூறுவது..
விடை:-2 C அவதூறு கூறுவது..
திருக்குர்ஆன்-24:17
கேள்வி -3 அந்நாளில் நரகத்தை நோக்கி தங்களுடைய முகங்களால் இழுத்துச் செல்லப்படுபவர்கள் யார்?
A - தீமையை மட்டும் செய்தவன்..
B இறை மறுப்பாளன்..
C வட்டி வாங்கியவன்..
விடை:- 3 B இறை மறுப்பாளன்..
திருக்குர்ஆன்-25:34
கேள்வி- 4 இறைமறுப்பாளர்க்கு மறுமைநாள் _________தும், மிகவும் ____________தும் ஆக இருக்கும்..
A - கடினமானதும்,துன்பாமானதும்..
B - அதிர்ச்சியளிக்கக்கூடியதும்,கசப்பானதும்..
C - துனபம் தரக்கூடியதும்,வேதனையானதும்..
விடை: 4 B அதிர்ச்சியளிக்கக்கூடியதும்,கசப்பானதும்..
திருக்குர்ஆன்-54-46
கேள்வி - 5 முஃப்லிஹூன் என்றால் யார்.?
A - வெற்றியாளர்கள்..
B - இறைநேசர்கள்..
C - சீமான்கள்..
விடை:- 5 Aவெற்றியாளர்கள்..
திருக்குர்ஆன்-59-9
கேள்வி - 6 நிச்சயமாக இவர்கள் "பொய்யர்கள்" என்று வல்லவனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ்வே சாட்சியம் அளிக்கின்றான்..?
A - காஃபிர்கள்..
B - இறை வசனங்களை மறுப்பவர்கள்..
C - நயவஞ்சகர்கள்..
விடை:-6 C நயவஞ்சகர்கள்..
திருக்குர்ஆன்-63:1
கேள்வி - 7 அந்நாளில் இடதுபக்கதார் மீது கண்ணியமிக்கோனான அல்லாஹ்வின் ___________ படர்ந்திருக்கும்..!
A - நெருப்பு..
B - வேதனை..
C - கோபம்..
விடை:- 7 A நெருப்பு..
திருக்குர்ஆன்-90:20
கேள்வி - 8 ஏக இறைவனை துதிக்கும் சொற்களில் மிகவும் சிறந்ததும், தன்னுடைய மலக்குகளுகாகவும், தன்னுடைய அடியார்களுக்காவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ள திக்ர் எது..?
A - லாஇலாஹ இல்லலாஹு முஹம்மதுர் ரஸூலில்லாஹ்..
B - சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லலாஹு வல்லாஹு அக்பர்..
C - சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி..
D - லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்..
விடை:-8 C சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி..
முஸ்லீம்-5277
கேள்வி - 9 பணக்காரர் ஒருவர் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் தவணை கேட்டு இழுத்தடிப்படது____________ஆகும்..!
விடை:- 9 அநியாமாகும்..
புகாரி-2287
கேள்வி - 10 வல்ல இறைவனான உயர்ந்தோன் அல்லாஹ் மனிதர்களின் _____________யை தன்னுடைய நாட்டத்தின்படியே மாற்றுகிறான்..!
A - செயல்களை..
B - விதிகளை..
C - உள்ளங்களை..
விடை:- உள்ளங்களை..
முஸ்லீம்-5161
Comments
Post a Comment